ஓடும் நதியில் நிழலுதிர்த்து,
வீசுங்காற்றில் சுகந்தபரப்பும்
செண்பகமரத்து பூ நீ..
நடைபாதை சிறுவர்கள்
எறிந்து விளையாடும்
படித்துறை கூழாங்கல் நான்,
மாயச் சிறுவனொருவன்
உனை நோக்கி, எனை வீசியதில்
ஆற்றில் உதிர்ந்த நீ,
ஏகாந்த உலாச்செல்வாதாய் எண்ணி
துணைக்கு எனை அழைத்தாய்..
சென்று சேருமிடம்
உப்புக்கடலென்பதை
அறியாமல் உலாச்செல்லும்,
மூழ்காதவுனை பின் தொடர
ஆற்றில் இறங்கிய நான்
மெது,மெதுவாய்
மூழ்கத்துவங்கினேன்
பிரியங்களை வெளியேற்றியபடி..
வீசுங்காற்றில் சுகந்தபரப்பும்
செண்பகமரத்து பூ நீ..
நடைபாதை சிறுவர்கள்
எறிந்து விளையாடும்
படித்துறை கூழாங்கல் நான்,
மாயச் சிறுவனொருவன்
உனை நோக்கி, எனை வீசியதில்
ஆற்றில் உதிர்ந்த நீ,
ஏகாந்த உலாச்செல்வாதாய் எண்ணி
துணைக்கு எனை அழைத்தாய்..
சென்று சேருமிடம்
உப்புக்கடலென்பதை
அறியாமல் உலாச்செல்லும்,
மூழ்காதவுனை பின் தொடர
ஆற்றில் இறங்கிய நான்
மெது,மெதுவாய்
மூழ்கத்துவங்கினேன்
பிரியங்களை வெளியேற்றியபடி..
