
எனது உலகம் முன்பு போல் இல்லை..
நீ என்னுடன் பேசத் துவங்கிய பிறகு
மழையால் நிரம்பத் துவங்கிய என்னுலகம்,
மண்ணின் வாசனையாலும்
மழைநேரத்து வண்ணங்களாலும்
மழையை வரவேற்று கூத்தாடும்
வண்ண மயிலின் மகிழ்ச்சியாலும்
நிரம்பி வழிகிறது
முன்பு,
தனிமையில் மேற்கொள்ளும்
இலக்கற்ற பயணங்களுக்கு
வழித்துணையாக முடியாத
நீண்ட இரவுகளின் புழுக்கமும்
இணையைப்பிரிந்த தவளைகளின்
"கொல்லொலி"யுமே வாய்த்தது
இன்றோ,,
நிலவும், மழையும் சேர்ந்து
பொழியும் குளுமையுடன்
ஏகாந்தமாய்ப் பாடிச்செல்லும்
இரவுப்பறவைகளின் கீதங்களும்
நிஜங்களாக மாறத்துடிக்கும்
உன் பிரிய நினைவுகளும்
வழித்துணையாய் வாய்க்கிறது
ஆம், எனது உலகம் முன்பு போல் இல்லை
